மாணவிகளுக்கு போதை ஊசி-ஆசிரியர் கைது
திண்டுக்கல்: மாணவிகளுக்கு போதை ஊசி போட்டதாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நவமரத்துப்பட்டியில் உள்ளது முத்துலட்சுமி அம்மாள்-ரெங்கசாமி ரெட்டியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.
இங்கு அமலோற்பவநாதன் என்பவர் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாராம்.
8ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் மேஜிக் ஊசி என்று கூறி இவர் போதை ஊசியைப் போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளும் மாணவியருக்கு, தேர்வில் அதிக மதிப்பெண்களையும் வழங்கினாராம்.
இவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட மாணவி ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்வே அவர் தனது பெற்றோரிடம் ஊசி போட்டுக் கொண்டதை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார்.
அப்போது அமலோற்பவநாதன், நான் யாருக்கும் போதை ஊசி ஏதும் போடவில்லை, அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை தான் தந்தேன் என்றார்.
ஆனாலும் மேற்கொண்டு பிரச்சனை உருவாவதைத் தடுக்க அமலோற்பவநாதனை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்து அவரது மனைவி பிரிசில்லாவை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர் பள்ளி நிர்வாகிகள்.
இதற்கிடையே போதை ஊசி விவரம் கிராமம் முழுவதும் பரவவே மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வகுப்பறைகளில் உள்ள மேஜை, நாற்காலி மற்றும் மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து அமலோற்பவநாதனையும் அவரது மனைவியையும் ஒரு வகுப்பறைக்குள் பாதுகாப்பாக வைத்துவிட்டு மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினார் மாவட்ட எஸ்பி சின்னச்சாமி.
ஆனாலும் ஆத்திரம் அகலாத பொதுமக்கள் அறைக் கதவை உடைத்துக் கொண்டு ஆசிரியரையும் மனைவியையும் தாக்க முயன்றனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அமலோற்பவநாதனை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்தே மக்கள் அமைதியாயினர்.
மேலும் அமலோற்பவநாதனை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications