For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு-எதி்ர்த்து 'டிராபிக்' மனு

By Staff
Google Oneindia Tamil News

Traffic Ramasamy
சென்னை: எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சமீபத்தில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த ஊதிய உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று கோரி சமூகநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், எமஎல்ஏக்களுக்கு கடந்த சில ஆண்டுகளிலேயே 3வது முறையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு கௌரவ அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, வழங்கப்படும் படிகள் உட்பட பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு இருக்கின்றன.

மேலும் அவர்களுக்காக வீட்டு மனை வழங்கும் திட்டமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான சம்பள சுமையால் அரசு அவதிப்படுகிறது. இந்நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை விட எம்எல்ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வு தீர்மானத்தை அமல்படுத்தக் கூடாது என்று மாநில நிதித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கோகலே மற்றும் நீதிபதி முருகேசன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X