For Quick Alerts
For Daily Alerts
Just In
சில்மிஷ கணவன்-போலீசில் ஒப்படைத்த மனைவி
சென்னை: மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்த கணவரை மனைவியே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் (26). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு.
நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை மாடிப் படிக்கட்டில் வைத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் ஐயப்பன். இதையடு்து அந்த மாணவி உதவி கேட்டு அலறவே சுமதி உள்ளிட்ட அப் பகுதியினர் அங்கு ஓடினர்.
அவர்கள் ஐயப்பனை அடித்து உதைத்தனர். அத்தோடு அந்தப் பிரச்சனையை விட்டுவிடவும் முயன்றனர்.
ஆனால், கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த சுமதி, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அப் பகுதியினர் உதவியோடு தண்டையார்பேட்டை காவல் நிலையத்தி்ல் ஒப்படைத்தார்.
Comments
Story first published: Friday, August 7, 2009, 15:34 [IST]