திருச்சியில் மாணவன் நரபலி?-ஒருவன் சரண்
திருச்சி: திருச்சியில் குளத்தில் பள்ளி மாணவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். அவன் நரபலி தரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த துப்புறவுத் தொழிலாளி முருகேசனின் மகன் மணிகண்டன் (13). ஆறாம் வகுப்பு படித்து வந்த இந்தச் சிறுவன் சில நாட்களுக்கு முன் இரட்டைமலை ஒண்டிகருப்புசாமி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றான்.
ஆனால், இரவாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிய பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இந் நிலையில் நேற்று அருண்குமார் (24) என்பவர் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில் மணிகண்டனை எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே தண்டவாளம் அருகே கொன்று போட்டு விட்டதாகக் கூறினார். இதையடுத்து போலீசார் அப் பகுதியில் உடலைத் தேடினர்.
அப்போது கருமண்டபம் கொல்லங்குளத்தில் மணிகண்டனின் உடல் கழுத்து அறுபட்ட நிலையில் மிதந்தது.
அவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இவரை அருண்குமார் நரபலி கொடுத்தாரா அல்லது வேறு யாராவது நரபலி தந்துவிட்டு வழக்கை திசை திருப்ப அருண்குமாரை சரணடைய வைத்துள்ளார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications