இடைத்தேர்தல் பிரசாரம்-திமுக பிரமுகர் மரணம்
பர்கூர்: பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பர்கூர் தொகுதியில் திமுக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே முழுமையாக உள்ள நிலையில் 5 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. பர்கூரில் தி.மு.க. வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளராக பெரம்பூர் சங்கர் பிரசாரம் செய்து வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு பெரம்பூர் பட்டேல் ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications