திருவண்ணாமலை கோவிலில் சாமி கும்பிட்டார் ஸ்டாலின் மகள்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் திருவண்ணாமலை வந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
செந்தாமரை, கணவர் சபரீசன் மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். அங்கு நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜையில், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.
பின்னர் ஆலயத்தின் மற்ற சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டு முடித்த பின்னர் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications