தமிழக கடலோர பாதுகாப்புக்கு 'புல்லட் புரூப்' ரோந்து படகு!
தூத்துக்குடி: தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோர பாதுகாப்பு படைக்கு குண்டு துளைக்காத அதி நவீன ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழு ஐஜி ராஜேஷ் தாஸ் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய நவீன ரோந்து படகு தூத்துக்குடி வந்துள்ளது. சுமார் 12 டன் எடை கொண்ட இந்த படகு ரூ.2.15 கோடி செலவில் கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்று மேலும் 23 ரோந்து படகுகள் வரவுள்ளன. இதில் தூத்துக்குடியில் 4 படகுகள் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். குண்டு துளைக்காத புல்லட் புரூப் கண்ணாடி வசதி கொண்ட இந்த படகு 50 கடல் மைல் வேகத்தில் செல்லும்.
மேலும், கடலோர பாதுகாப்பு வீரர்களுக்காக 'ஆபரேசன் பேரிகார்ட்" என்னும் பெயரில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசின் கடலோர பாதுகாப்பு படை, கப்பற்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது நக்சல்கள் தாக்குதல் எதுவும் இல்லை எனிமும், வரும் காலங்களில் அப்படி எதுவும் நிகழ்ந்தால் கூட, அதனை முறியடிக்கும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
தமிழக கடல்பகுதியில் தற்போதுள்ள 60 சோதனை சாவடிகளுடன், மேலும் 40 அமைக்கப்பட வேண்டும். தற்போது 18 சோதனை சாவடிகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த இயலும் வகையில் 4 சக்கரங்களைக் கொண்ட நவீன ரக பைக் விரைவில் வாங்கப்படும் என்றார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications