மதுரை நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: மதுரை காளவாசலில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ஜெர்மானஸ். இவர் காளவாசலில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜெர்மானஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் உங்களது ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த வெடி குண்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெர்மானஸ் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் போரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த ஹோட்டலுக்கு வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சகிதம் சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் ? எங்கிருந்து அந்த போன் அழைப்பு வந்தது ? மிரட்டல் விடுக்க காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.