For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்வைன் பரவல் எதிரொலி - விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டங்களைத் தடை செய்யக் கோரி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

Supreme Court
டெல்லி: பன்றிக் காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி (கிருஷ்ண ஜெயந்தி விழாக் கொண்டாட்டம்) உள்ளிட்ட பண்டிகக் கொண்டாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு இன்னும் முழுமையாக தயாராகாத நிலை காணப்படுகிறது. எனவே மக்கள் பெருமளவில் கூடும் விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி போன்ற கொண்டாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக இதை எடுத்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆகஸ்ட் 14ம் தேதி வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தஹி ஹண்டி கொண்டாடப்படுகிறது. தஹி ஹண்டி என்பது உறியடி விழாவாகும்.

விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X