ஸ்வைன் பரவல் எதிரொலி - விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டங்களைத் தடை செய்யக் கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு இன்னும் முழுமையாக தயாராகாத நிலை காணப்படுகிறது. எனவே மக்கள் பெருமளவில் கூடும் விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி போன்ற கொண்டாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக இதை எடுத்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தஹி ஹண்டி கொண்டாடப்படுகிறது. தஹி ஹண்டி என்பது உறியடி விழாவாகும்.
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications