தமிழகத்தில் போதுமான டாமிப்ளூ கையிருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பன்றி காய்ச்சல் நோய்க்கான டாமிப்ளூ மருந்து தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதாக தலைமை செயலர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பயப்படும் அளவுக்கு இல்லை. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக அரசிடம் பன்றி காய்ச்சலுக்கு தேவையான டாமிப்ளூ மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. நோயை கண்டறியும் உபகரணங்களும் போதுமான அளவு உள்ளன.
நோய் பாதிக்கப்பட்டவர்களைத் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். வழக்கமான சோதனைக்காக கிங்ஸ் அரசு சோதனை மையத்துக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
முக கவசங்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications