அதிமுக நிர்வாகிகளுடன் ஜெ மீண்டும் ஆலோசனை

கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதை புறக்கணித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த ஜூன் மாதம் கொடநாடு சென்ற அவர் எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை. பல முறை கட்சி நிர்வாகிகளை அங்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந் நிலையில் இடைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார், தம்பிதுரை, சுலோச்சனா சம்பத், பொன்னையன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை இன்று கொடநாடு எஸ்டட்டுக்கு வரவழைத்துள்ளார் ஜெயலலிதா.
அவர்களுடன் இன்று ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.
இடைத் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்த சில முக்கிய உத்தரவுகளை ஜெயலலிதா பிறப்பிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications