ஸ்வைன் ப்ளூ-பெங்களூரில் மேலும் 2 பெண்கள் பலி
பெங்களூர்: பெங்களூரில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இங்கு இந்தக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர் அஸ்வத் நகரைச் சேர்ந்த சம்சத் பேகம் (27) என்ற பெண் கடும் ஸ்வைன் ப்ளூ அறிகுறிகளுடன் கடந்த 10ம் தேதி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் 3 மாதமாகவே மூச்சுத் திணறலால் தவித்து வந்துள்ளார். சமீபத்தில் காய்ச்சலும் இருமலும் அதிகரிக்கவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்தபோது அவரது இருதய வால்வு பாதிக்கப்பட்டுள்ளதும், நிமோனியா தாக்குதல் இருப்பதும் தெரியவந்தது. ஐசியுவில் வைக்கப்பட்டு டாமிப்ளு மருந்து அளிக்கப்பட்டது. ஆனால், அவரது கிட்னிகளும் பாதிக்கப்பட்டதில் நேற்றிரவு இறந்தார்.
அதேபோல் ஷில்பா ஹெக்டே (27) என்ற பெண் பன்றி காய்ச்சல் நோயுடன், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இதன்மூலம் பெங்களூரி்ல் ஸ்வைன் ப்ளூ பலிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 5 மாத குழந்தைக்கு...
இந் நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 மாத குழந்தையும் அடக்கம்.
திருப்பதி-பக்சர்களுக்கு முகக் கவசம்:
இந் நிலையில் பன்றிக் காய்ச்சலை தடுக்க திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்படுகிறது. இதற்காக மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான முகக் கவசங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதை அணிந்தபடியே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications