ஆப்கானி்ஸ்தான்-செக்சுக்கு மறுத்தால் மனைவியை பட்டினி போட சட்டம்!!
லண்டன்: தன்னுடன் செக்ஸ் வைக்க மறுக்கும் மனைவியை பட்டினி போட வழி வகுக்கும் புதிய சட்டத்தை ஆப்கானி்ஸ்தான் அரசு அமலாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பை மேற்கொள்காட்டி லண்டனில் இருந்து வெளியாகும் த கார்டின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இச் சட்டத்தின்படி, தன்னுடன் செக்ஸ் வைக்க மறுக்கும் மனைவிக்கு உணவு தராமல் கணவன் பட்டினி போடலாம்.
மேலும் ஒரு ஆணால் கற்பழிக்கப்படும் பெண் அதனால் காயமடைந்தால் அதற்குரிய நிவாரணமாக பணம் தந்தால் கற்பழிப்பு வழக்கிலிருந்து தப்பலாம்.
குழந்தைகளை பராமரிக்கும் உரிமை தந்தை, தாத்தாவுக்கே உண்டு. பெண்கள் வேலைக்குச் செல்ல கணவனிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆப்கான் மக்கள் தொகையில் 20 சதவீதம் வசிக்கும் ஷியாக்களின் வாக்குகளைப் பெற இந்த சட்டத்தை அதிபர் ஹமீத் கர்சாய் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அங்கு அடுத்த வாரம் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷியா பிரிவின் மூத்த தலைவரன ஆயதுல்லா மெஹ்சேனி என்பவரின் வலியுறுத்தல் காரணமாகவும், இவர் மூலமாக ஷியா பிரிவினரின் வாக்குகளைப் பெறவும் கர்சாய் இந்த சட்டத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.