சண்டிகரில் சத்யம் புதிய கிளை!

Subscribe to Oneindia Tamil

சத்யம் டெக் மகிந்திரா நிறுவனம் சண்டிகரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. இந்தக் கிளை மூலம் 1000 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இவர்களில் 500 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பும், மேலும் 500 பேருக்கு அடுத்த மாதம் புதிய பணிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சண்டிகர் நகரில் சத்யம் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த இரண்டாவது அலுவலகம் 18 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி பிபிஓ சப்போர்ட்தான். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பிபிஓ பணிகள் செய்து தரும் வேலைதான் இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும்.

அடுத்த கட்ட விரிவாக்கமாக, இரண்டாம் கட்ட நகரங்களில் புதிய அலுவலகங்களைத் திறக்க சத்யம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மிக சமீபத்தில்தான் இன்போஸிஸ் நிறுவனம், இரண்டாம் கட்ட நகரங்களில் கிளைகளைத் துவங்குவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+