சென்செக்ஸில் பெரும் வீழ்ச்சி... 627 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை இந்த வாரம் எடுத்த எடுப்பில் பெரும் சரிவில் தொடங்கியது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்த உடனே 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ் குறியீட்டெண்ணில்.
வர்த்தக நேர முடிவில் இந்த சீசனில் இல்லாத அளவு மிக அதிகபட்சமாக 627 புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் 15000 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து கீழிறங்கியது சென்செக்ஸ்.
நிப்டியில் 192 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இந்தியப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் இவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இந்த சீஸனில் இதுவே முதல் முறை.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளில் பலவீனமான போக்கு தொடர்ந்ததால் பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதுதான் இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம் என பங்குத் தரகர்கள் தெரிவித்தனர்.
ஸ்டெரிலைட், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா போன்றவை பெருமளவு நஷ்டத்தை எடுத்த எடுப்பில் சந்தித்தன.
ஓஎன்ஜிஸி, இன்போஸிஸ், விப்ரோ போன்ற நிறுவன பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.
ஹாங்காங் மற்றம் ஜப்பானிய பங்குச் சந்தைகளும் இன்று பெரும் வீழ்ச்சி கண்டன. ஹாங்காங் பங்குச் சந்தை 750 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது.












Click it and Unblock the Notifications