வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: ராஜபக்சே ஆலோசகர் வேதனை
கொழும்பு: வெள்ளம் நிறைந்த சதுப்பு நிலத்தில் மக்கள் வாழும் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அங்குள்ள கூடாரங்களில் தங்கியுள்ள மக்களை மனிதர்களாக மதித்து அங்கிருந்து வெளியேற்றி பள்ளிக் கூடங்களிலாவது தங்க வைக்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மனிதர்களை மிருகங்களாக நடத்தாது மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வெள்ளத்திற்கு மத்தியில் முகாம்களில் வாழும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி பள்ளிகளிலாவது தங்க வைக்கவேண்டும்.
இதற்காகப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் பரவாயில்லை. அது மட்டுமல்லாது அந்த மக்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதை விடுத்து முள் கம்பி வேலிகளுக்குள் வெள்ளத்திற்கு மத்தியில் கூடாரங்களில் மக்களை தங்க வைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
தமிழர்களை தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தேசிய, சர்வதேச ரீதியில் அதிகரிக்கும். தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாது போகும்.
அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.
மனிதர்களை மனிதர்களாக மதித்து வாழ்வதற்கான சிறந்த சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications