50 அடி பள்ளத்தில் ஜீப் உருண்டது-இருவர் பலி
புளியரை: அம்பநாடு எஸ்டேட் பகுதியில் ஜீப் ஒன்று 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே அம்பநாடு எஸ்டேட் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கழுதுருட்டி பகுதிக்கு ஜீப்பில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று மாலை வேலை முடிந்த நிலையில் சுமார் 15 பேர் ஒரு தனியார் ஜூப்பில் கழுதுருட்டி நோக்கி வீ்ட்டு தேவைக்கான பொருட்கள் வாங்க வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜீப் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பள்ளத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இந்த விபத்தில் ஜெயக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயராணி என்பவர் புனலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.