For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியா-நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் இன்று சக்தி வாயந்த பூகம்பம் ஏற்பட்டது. அதே போல நியூசிலாந்திலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமார் 17 ஆயிரத்து 508 தீவுகளை உள்ளடக்கிய நாடு இந்தோனேசியா. பிசிபிக் 'ரிங் ஆப் பயர்' எனப்படும் பூகம்பம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகம் காணப்படும் பகுதியில் இருக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 16ம் தேதி மேற்கு இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ஆனால், கடலுக்கடியில் மிக ஆழத்தில் ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சுனாமியும் வரவில்லை.

இந்நிலையில் இன்று காலை சுமார் 6.01 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள மலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உணரப்பட்டது.

இந்த பூகம்பம் டெர்னேட் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 127 கிமீ தூரத்தில் கடலில் 10 கிமீ., ஆழத்தில் மையமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

அதே போல நியூசிலாந்தில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பியோட்லாந்து பகுதியில் கட்டடங்கள் அதிர்ந்தன.

சில வாரங்களுக்கு முன் இந் நாட்டில் 7.6 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X