சட்டசபை இடைத் தேர்தலில் 69.4% வாக்குகள் பதிவு!

Subscribe to Oneindia Tamil

Polling in Kambam
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 69.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் நடந்த வாக்குப் பதிவின் இறுதி நிலவரம்:

பர்கூரில் 72 சதவீதம்
தொண்டாமுத்தூரில் 59 சதவீதம்
கம்பத்தில் 77 சதவீதம்
இளையான்குடியில் 67 சதவீதம்
ஸ்ரீவைகுண்டத்தில் 72 சதவீதம்
மொத்தத்தில் 69.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஐந்து தொகுதிகளிலும் நேற்று தொடக்கம் முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு காணப்பட்டது.

ஐந்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 21ம் தேதி எண்ணப்பட்டு, சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இளையாங்குடிக்கு இதுவே கடைசி...

இளையாங்குடி சட்டசபைத் தொகுதி புதிய தொகுதிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே நேற்று நடந்த இடைத் தேர்தல்தான் இந்தத் தொகுதிக்கு கடைசி சட்டமன்றத் தேர்தலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளரே, இத்தொகுதியின் கடைசி எம்.எல்.ஏ ஆவார்.

ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 67 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், சிபிஐ-சிபிஎம் ஒரு அணியாகவும், தேமுதிக, பாஜக ஆகியவை தனித் தனியாகவும் இத்தேர்தலில் போட்டியிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+