சைபர் குற்றங்களின் மையமாக மாறுகிறது இந்தியா - ஆய்வு
லண்டன்: இந்தியாவில் சைபர் கிரைம் எனப்படும் இணையதளம் சார்ந்த குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், உலகின் சைபர் கிரைம் செயல்களின் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரைட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிவு படைத்தவர்கள், கிரிமினல்களாக மாறி வருவதாகவும், இணையதளங்களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை அவர்கள் செய்யத் தொடங்கியிருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
Crime Online: Cybercrime and Illegal Innovation என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடந்து வரும், நடந்த சைபர் கிரைம் செயல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த தகவல்கள் கவலை தருவதாகவும், இந்தியாவில் சமீப ஆண்டுகளில் சைபர் கிரைம் செயல்களில் பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஹோவரர்ட் ரஷ் கூறுகையில், ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் சைபர் கிரைம் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. தற்போது இந்தியாவும் இந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறி வருகிறது. விரைவில் இந்தியா சைபர் கிரைம் செயல்களில் முன்னிலை பெற்றாலும் வியப்பதற்கில்லை.
சைபர் கிரைம் செயல்கள் இந்த நாடுகளில் அதிகரித்து வந்தாலும் கூட, அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு ஐடி நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியா, பிரேசில், ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களது பணிகளைக் கொண்டு செல்வதை விடாமல் தொடர்ந்து வருகின்றன. காரணம் இந்த நாடுகளில் கிடைக்கும் மலிவான மனித உழைப்பு, குறைந்த செலவிலான அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவையே என்றார் ரஷ்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications