பங்குச் சந்தையில் தொடரும் நிலையற்ற போக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கள்கிழமையிலிருந்து விழுவதும் எழுவதுமாக ஊசலாட்ட வர்த்தகத்தில் உள்ளது.

வாரத்தின் முதல் நாள் 600 புள்ளிகளுக்கும் மேல் இழந்த பங்குச் சந்தை, அதற்கு அடுத்த நாள் மீட்சி பெற்றது. ஆனால் புதன்கிழமை மீணடும் சரிவைச் சந்தித்தது. இன்றோ அந்தச் சரிவிலிருந்து மீண்டுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தின் ஆரம்பம் மோசமாக இருந்தாலும், பின்னர் 202 புள்ளிகள் உயர்வு கண்டு, மீண்டும் 15000 புள்ளிகள் என்ற பெஞ்ச்மார்க் அளவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது சென்செக்ஸ்.

நிப்டியில் 59 புள்ளிகள் உயர்ந்தது.

ஆசியப் பங்குச் சந்தைகளான ஹாங்காங், டோக்கியோ மற்றும் சிங்கப்பூரின் சந்தைகள் கடந்த இன்று நல்ல உயர்வு கண்டன.

மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஹீரோ ஹோண்டா, மாருதி சுசுகி, எஸ்பிஐ, கிராஸிம், எச்டிஎப்சி போன்ற நிறுவனப் பங்குகள் இன்று குறிப்பிடத்தக்க லாபத்தில் கைமாறின.

விப்ரோ, இன்போஸிஸ், பிஎச்இஎல், என்டிபிசி, ஐடிசி, ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளும் நல்ல லாபம் கண்டன.

பார்தி ஏர்டெல் இன்று சரிவைச் சந்தித்த பங்குகள் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. நிப்டியில் கெய்ர்ன் இந்தியா, ஏபிபி, ஐடியா போன்றவை உயர்வு கண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+