இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை-பாஜக
திருச்சி: தமிழகத்தில் இடைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
திருச்சியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் நடந்து வரும் சில சம்பவங்களை பார்க்கும்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பது தெரிகிறது. எனவே தமிழ்நாடு பாதுகாப்பாக இருப்பதாக கருதி தமிழக அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.
பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விஷயம் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், கட்சியில் எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் பாஜக நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதையே காட்டுகிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே பிரச்சனை சுமூகமாக தீர்ந்துவிடும்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்க்கவில்லை என்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என்று கூறுகிறது. முறையாக நடந்தது என்று நாம் அதை எடுத்துக் கொள்ள முடியாது.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இதற்காக நான் 2 மாநில முதல்வர்களுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். பேச்சு வார்த்தைகள் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்த்து கொள்ள முடியும் என்பதை இது காட்டுகிறது என்றார்.
தமிழகத்தில் பாஜகவின் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு வலுவான தலைமை இல்லாததே காரணம் என அக் கட்சியின் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆப்தே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications