சென்னை வந்த விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூரில் இருந்து 132 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை வந்து கொண்டிருந்தது. 11.30 மணியளவில் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது நடுவானில் அந்த விமானத்தின் டயர் வெடித்தது.
இது குறித்து சென்னை விமான நிலையத்துக்கு விமானிகள் தகவல் தரவே விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு 'எமர்ஜென்சி லேண்டிங்குக்கு'த் விமான நிலையம் தயார் செய்யப்பட்டது.
அந்த விமானம் தரையிறங்கும் ஓடு தளத்த்தை ஒட்டி தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந் நிலையில் அந்த விமானம் எந்த சிக்கலும் இன்றி பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications