ஸ்வைன்-சென்னையில் 3வது பலி: நாடு முழுவதும் 50 பேர்
சென்னை: சென்னையி்ல் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.
குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் இந்த நோய்க்குப் பலியானார். மூல நோய்க்கு சிகிச்சை பெற்று இவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு பலியானார்.
ஏற்கனவே சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன், நீலாங்கரையைச் சேர்ந்த மீனவர் ஆகியோர் பலியான நிலையில் இப்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.
இறந்த சேகர் மணமாகாதவர் ஆவார். தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.
சேகரின் உடலை வீட்டு்க்கு எடுத்துச் செல்லாமல் நேராக சுடுகாட்டுக்கு சென்று எரித்துவிட வேண்டும் என அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டனர்.
அங்கு அவரது உறவினர்கள் முகக் கவசங்கள் அணிந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இறுதி சடங்கு முடிந்ததும் சேகரின் உடல் எரியூட்டப்பட்டது.
இந் நிலையில் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் மேலும் இருவரும் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளதால் இதுவரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர நேற்றும் இன்றும் இந்த நோய் அறிகுறியுடன் புதிதாக 159 பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியா முழுவதும் 2,539 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்











Click it and Unblock the Notifications