For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றி காய்ச்சல்:கர்நாடகாவில் 13வது பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு பெங்களூரில் ஒரு பெண் பலியானதை அடுத்து கர்நாடகாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை கவலை அடைந்துள்ளது.

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று மாலை வரை ஏழு பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பெங்களூரில் 50 வயதான பெண்மணி இந்த கொடிய நோய்க்கு பலியாகியுள்ளார்.

சரோஜாம்மா என்ற அந்த பெண்மணி சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தரசஹள்ளியில் இருக்கும் திருமலை மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அவருக்கு டாமிப்ளு மாத்திரை கொடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக் தேறிவந்த நிலையில் நேற்று இரவு திடீரென மரணமடைந்தார். இதையடுத்து கர்நாடகவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

புனேவில் 23...

நேற்று இரவு புனேவில் 2 வயதுக் குழந்தை ஒன்று உள்பட மேலும் ஒருவர் பலியாகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து புனேவில் மட்டும் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X