ரூ. 48 லட்சம் வங்கி மோசடி-நெல்லை நபர் கைது
நெல்லை: கோயம்புத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் போலி ஆவணம் கொடுத்து ரூ. 48 லட்சம் நிதி மோசடி செய்த ஒருவரை போலீசார் 2 ஆண்டுகளுக்கு பின் நெல்லை அருகே கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள தக்கலையை சேர்ந்தவர் சுல்தான் மதானி. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு வங்கியில் தொழிற்சாலை தொடங்குவதாக கூறி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.48 லட்சம் கடன் பெற்றார்.
சில மாதங்களுக்கு பி்ன் வங்கி அதிகாரிகளுக்கு அவர் போலி ஆவணம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். ஆனால், 2 ஆண்டுகளாகியும் தலைமறைவான மதானியை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று அவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகத்தியர்பட்டியில் உள்ள உறவினர் வீ்ட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், மதானி தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கோவை சிபிசிஐடி போலீசாரிடம் ஓப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications