''ஜின்னாவை புகழ்வதை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்''
கொல்கத்தா: ஜின்னாவைப் புகழ்வதை எந்த இந்தியரும் குறிப்பாக இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
ஜஸ்வந்த் சிங் விவகாரம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் விவகாகரம் பாஜகவின் உள் கட்சி விவகாரம்.
இருப்பினும் ஜின்னாவைப் புகழ்வதை எந்த இந்தியரும், குறிப்பாக இந்துக்கள் ஏற்க மாட்டார்கள்.
இந்தியா பிரிந்ததற்குக் காரணமே ஜின்னாதான். இது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்தான்.
பாஜக தலைவர்கல் கட்சிக் கொள்கைக்கு எதிராக செல்கிறார்களா, இல்லையா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் அதுகுறித்து விவாதிக்க வேண்டும். இது அவர்களது பிரச்சினை. எங்களுடையது (வி.எச்.பி.) மத அமைப்பு. நாங்கள் பாஜகவின் தலைவர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் ஆலோசனை சொல்லவும் மாட்டோம் என்றார் சிங்கால்.