For Daily Alerts
Just In
பால் விலை உயர்வுக்கு பாஜக எதிர்ப்பு
திருச்சி: தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக தலைவர் இல கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு பால் விலையை அதிகரித்து இருப்பதால் பொதுமக்களை மிகவும் பாதிக்கப்ப்டடுள்ளனர். இந்த விலை உயர்வை ஏற்று கொள்ள முடியாது.
இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த மழுப்பலான பதில்கள் உறுதி செய்துள்ளன.
தமிழக-கர்நாடக அரசுகளுக்கிடையே நிலவும் நட்புறவு பாராட்டுக்குரியது. இதனைப் பயன்படுத்தி இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க முயல வேண்டும்.
இந்த நட்புறவு கூட்டணியாக மாறும் என்பது ஊடகங்களின் கருத்து தான் என்றார்.
Comments
Story first published: Wednesday, August 26, 2009, 10:34 [IST]