கொடைக்கானலில் அன்னை தெரசா சிலை-கருணாநிதி திறக்கிறார்
கொடைக்கானல்: கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் முழு உருவச் சிலையை வரும் அக்டோபர் 15ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவிருக்கிறார்.
கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டது.
விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அருணா சிவகாமி பேசுகையில்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து வரும் அக்டோபர் 15ம் தேதி சிறப்பு பட்டமளிப்பு விழா நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் அன்னை தெரசாவின் முழு உருவ சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான இந்த சிலை பாண்டிச்சேரி சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது என்றார்.