For Daily Alerts
Just In
செயில் நிறுவனத்திலிருந்து மேலும் 10 சத பங்குகளை விற்கிறது மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய உருக்கு நிறுவனமான செயிலின் பங்குகளை விற்கிறது மத்திய அரசு.
இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 85.82 சதவீத பங்குகள் உள்ளன. மீதி 10 சதவிகிதம் பொதுமக்களிடமும், 4.59 சதவீத பங்குகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமும் உள்ளன.
இப்போது தன்னிடமுள்ள பங்குகளில் மேலும் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம் செயில் நிறுவன விரிவாக்கத்துக்குத் தேவையான ரூ.70,000 கோடியைத் திரட்டப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் நிதித் தேவைகளுக்கு கடன் பத்திரங்களை வெளியிடப் போவதாகவும் மத்திய உருக்குத் துறைச் செயலர் பி.கே. ரஸ்தோகி கூறுயுள்ளார்.
நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி ஆண்டுக்கு 1.4 கோடி டன்னாக உள்ளது. இதை 2012-ம் ஆண்டுக்குள் 2.3 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, August 28, 2009, 14:18 [IST]