பிரியாமலிருந்திருந்தால் வல்லரசாயிருப்போம்-ஜஸ்வந்த்

பாகிஸ்தானின் டான் டிவிக்கு ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்த நூல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பன்முகம் கொண்ட பெடரல் இந்தியா அமைய வேண்டும் என்பது காந்தி மற்றும் ஜின்னாவின் கனவாக இருந்தது. ஆனால் ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும், காங்கிரஸ் கட்சியும்தான் இந்தியப் பிரிவினைக்கு வழி வகுத்து விட்டனர்.
நாடு உடைய நாம் வழி வகுத்து விட்டோம். படேலும், நேருவும், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்க ஒப்புக் கொண்டனர். ஆனால் அதை கூறு போட்ட வடிவில் ஏற்க முன்வந்தனர். நாம் ஒன்றாக இருந்திருந்தால், பாகிஸ்தான் உருவாகாமல் இருந்திருந்தால் இன்னேரம் வல்லரசாக மாறியிருப்போம்.
இனிமேல் பூகோள எல்லைய மாற்றியமைக்க முடியாது. எனவே கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்திருப்போம் என்ற எண்ணத்தை இரு நாட்டு மக்களும் மாற்றிக் கொள்ள வேண்டும். இரு நாடுகளும் இணைந்து தெற்காசியாவின் சோகங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பெருந்தன்மையான மனது இரு நாடுகளுக்கும் தேவை.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2002ம் ஆண்டில் ஏற்பட்ட மோதலின்போது அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டதெல்லாம் தவறானவை. அந்த நிலையே அப்போது ஏற்படவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
புத்தகத்துக்குத் தடை-எதிர்த்து வழக்கு:
இந் நிலையில் ஜின்னா குறித்து தான் எழுதிய "Jinnah -- India, Partition, Independence" புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தப் புத்தகத்தை படித்தே பார்க்காமல் தடை விதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications