சிட் பண்ட்கள் டெபாஸிட்டுகளை ஏற்கத் தடை: ரிசர்வ் வங்கி
மும்பை: சிட் பண்ட் என்படும் தனியார் சீட்டுக் கம்பெனிகள் பொது மக்களிடமிருந்து டெபாசிட்களை பெறுவதற்கு தடை விதிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து சிட் பண்ட் நிறுவனங்கள் டெபாசிட்களை பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியை பல நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி வந்தன. பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு பல நிதி நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன.
இனி அப்படி நடக்காத வகையில் மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணத்தை இழந்த பொதுமக்கள் தரப்பிலிருந்து நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தன.
இதையடுத்து சிட் பண்ட் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பெற தடை விதிப்பதாகவும், இனி பங்குதாரர்களிடம் இருந்து மட்டுமே அந்த நிறுவனங்கள் டெபாசிட் பெறலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்கள் பெறப்பட்டிருந்தால் அது முதிர்வடையும் போது மக்களிடமே கொடுக்க வேண்டும், புதுப்பிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications