ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சல் - பொது மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பொது மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடும் பீதி நிலவி வருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரு வித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பொது மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண், பெண், சிறுவர்கள், பெரியவர்கள் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரும் இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி, வாந்தி, காய்ச்சல், சளி போன்றவை இருக்கிறது.
தொற்று நோய் போல் வீட்டில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் வந்தால் அடுத்தவருக்கும் உடனே வந்து விடுகிறது. இதனால் இந்த பகுதியில் பொது மக்களிடம் கடும் பீதி நிலவி வருகின்றது.












Click it and Unblock the Notifications