ஹைதராபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டு மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல புத்தகங்களும், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நூலகம் மற்றும் வக்கீல்களின் அறைகள் இருக்கிறது.
இந்த பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் புத்தகங்கள் மற்றும் பல ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
இதையடுத்து உயர் நீதிமன்ற காவலாளிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பத்து தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயணைக்க முயன்றனர்.
ஆனால், அந்த கட்டிடம் முழுவதும் மரத்தால் ஆனது என்பதால் தீயை எளிதில் அணைக்க முடியவில்லை. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது












Click it and Unblock the Notifications