மாஜி கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மீது சொத்து குவிப்பு புகார்
சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் சிக்கிய முன்னாள் கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் சிக்கிய அப்போதைய கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தற்போது டெல்லியில் தமிழ்நாடு இல்ல உறைவிட கமிஷனராக இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில், அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனின் உத்தரவைத் தொடர்ந்தே தடியடி நடத்தப்பட்டது என மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது அவர் சொத்து குவிப்பு புகார் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் உரிமை கழம் என்ற அமைப்பு இதுதொடர்பாக தலைமை செயலர் ஸ்ரீபதிக்கு புகார் அனுப்பியுள்ளது.
அதில், விஸ்வநாதன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று ஸ்ரீபதி, உள்துறை செயலர் மாலதி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
அந்த குழுவினர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும், விரைவில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஏ.கே விஸ்வநாதனிடம் இது குறி்தது முறையாக விசாரணை நடத்த உத்தரவிடுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும், இதுவரை தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் ஐஜி சுனில் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications