எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவு
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவெடுத்து விட்டார். நவம்பர் 8 முதல் டிசம்பர் 25க்குள் அவர் பதவி விலகுவார் என்று தெரிகிறது.
நவம்பர் 8ம் தேதி அத்வானியின் பிறந்த நாள். அதேபோல டிசம்பர் 25ம் தேதி அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற நவம்பர் 8ம் தேதியுடன் அத்வானிக்கு 82 வயதாகிறது என்பதும் முக்கியமானது.
எதிர்க்கட்சியிலிருந்து விலகும் அத்வானி, அடுத்த பாஜக தலைவர் யார் என்பதையும் முடிவெடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் நடந்த சந்திப்புகளின்போது தான் பதவி விலகுவது, அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் விரிவாக விவாதித்து விட்டாராம் அத்வானி. அதேபோல முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார் அத்வானி.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக செயல்படுவார் அத்வானி.












Click it and Unblock the Notifications