விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்!
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு, அபராத மின் கட்டணம் ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 5 -ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட கலெக்டர் டாக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, இன்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் மீண்டும் உற்பத்தியை தொடங்கினர்.