இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று சுமார் 7.4 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதையடு்த்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் இன்று காலை சுமார் 11.55 மணிக்கு சுமார் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது தாசிகாமாலாயா நகரில் இருந்து சுமார் 142 கிமீ தொலைவில் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
சுமார் 10 வினாடிகள் நீடித்த அந்த பூகம்பத்தில் அந்நகரில் உள்ள டச்சு வங்கி கட்டிடம் பயங்கரமாக குலுங்கியது. இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள், அலுவலகர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அந்நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. மக்கள் அனைவரும் பீதியி்ல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோம் என்றார்.
அருகில் இருக்கும் பாடங் நகரங்கில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் சுமார் 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பெரிய அளவில் இருக்காது என்றும், சில 100 கிமீ பகுதிக்குள் சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications