இரட்டை கொலை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரிக்க வேண்டும்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பனையூர் இரட்டை கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் சென்னை பனையூரில் முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவன் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டனர். அவரது மகன், மருமகள் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சண்முகராஜன் விசராணையின் போது மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

பனையூர் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த வழக்கில் நிலவும் பல புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும்.

தமிழக அரசு சென்னை போலீசிடம் இருந்து இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியுள்ளது. இதனால் விசாரணையில் மேலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

குற்றவாளி சண்முகராஜன் மர்மமான முறையில் இறந்தது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+