For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசிய பூகம்ப பலி 46 ஆனது-18,000 வீடுகள் தரைமட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 46 பேர் பலியானார்கள். மேலும், 42 பேர் இடிபாடுகளுக்கு சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 18 ஆயிரம் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் இன்று காலை சுமார் 11.55 மணிக்கு சுமார் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

இந்த பூகம்பத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமார் 200 கிமீ., தூரத்தில் சியன்ஜூர், தசிக்மலாயா, கருத் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

இது குறித்து இயற்கை சீற்ற மேலான்மை துறையின் செய்தி தொடர்பாளர் பிரியாடி கர்டோனோ கூறுகையில்,

இந்த பூகம்பத்தை ஜாவா மட்டுமல்லை பாலி மற்றும் சுமத்ரா தீவு மக்களும் உணர்ந்துள்ளனர். இதுவரை 46 பேர் பலியாகி இருக்கிறார்கள், சியன்ஜூர் பகுதியில் சுமார் 42 பேர் மண்ணுக்கடியில் புதைத்த நிலையில் இருக்கின்றனர்.

தற்போது எந்திரங்கள் எதுவும் இல்லாததால் கைகளால் அவர்களை மீட்க முயற்சித்த வருகிறோம். விரைவில் எந்திரங்கள் வந்துவிடும். மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 18 ஆயிரம் வீடு மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X