வாஜ்பாயுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்திப்பு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இன்று சந்தித்து அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து வாஜ்பாயின் செயலாளர் ஜிங்க்தா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். பிற்பகலி்ல் இந்த சந்திப்பு நடந்தது. வாஜ்பாயியின் உடல் நலன் குறித்து பகவத் விசாரித்தார். அரசியல் நிலைமைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது என்று தெரிவித்துள்ளார் ஜிங்க்தா.
பாஜகவுக்குள் பெரும் சுனாமி வீசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் வாஜ்பாயை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜஸ்வந்த் சிங்கும் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக கருதப்படும் அத்வானி இதுவரை வாஜ்பாயை சந்தித்து ஆலோசனை எதையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications