ரெட்டி மறைவு-கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி பூம்புகார் படகு சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் படகு சேவையும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ணபாண்டியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications