ஆலங்குளம் அருகே பச்சிளம் குழந்தை கொலை
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கல்வெட்டான் குழியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. தவறான தொடர்பால் பிறந்த குழந்தையை கொன்று வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகேயுள்ளது காசிநாதகிராமம். இதன் மேல்புறம் உள்ள கல்குவாரியின் குழியில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
நேற்று காலை 6 மணி அளவில் இந்த கல்வெட்டான் குழியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் ரத்த காயங்களுடன் மிதப்பதை கிராம மக்கள் பார்த்தனர். உடனே புதுப்பட்டி விஏஓ அருணாசலத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தாசில்தார் காமாட்சி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தவறான தொடர்பில் பெற்றெடுத்த குழந்தையை யாராவது வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications