For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரம்பலூரில் ரூ. 500 கோடியில் சேட்டிலைட் துணை நகரம்-ராஜா

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ. 500 கோடி மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் கொண்ட சேட்டிலைட் நகரம் அமைக்கபட இருப்பதா மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பில் ஸ்டார் ஓட்டல், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் என அனைத்து வசதிகளும் கொண்ட சேட்டிலைட் துணை நகரம் அமையவுள்ளது.

அக்டோபர் மாதத்தில், பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி, அரியலூர் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த திட்டங்களை சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கின்றார்.

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின் ஒருங்கிணைந்த திட்ட வரைவு, டெண்டர் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி, பணிகள் துவங்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X