For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோமா நிலைக்குப் போய் விட்டது அதிமுக - சாமி

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: அதிமுக கோமா நிலைக்குப் போய் விட்டது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதா கட்சி போட்டியிடும். பாஜவில் ஏற்பட்ட உச்கட்சி குழப்பத்தால் அந்த கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

பாஜவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. காங் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதிமுகவில் இப்போது எந்த தலைவர்களும் இல்லை. அந்த கட்சி கோமா நிலையில் உள்ளது.

இலங்கையில் புலிகள் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இலங்கை அரசு மறுவாழ்வு ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இலங்கையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்து கட்சிகள் அனைத்தும் விரைவில் ஓன்றிணைந்து இந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X