பாகிஸ்தான் திடீர் ராக்கெட் வீச்சு! எல்லையில் பதட்டம்!
அமிர்தசரஸ்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை வாகாவில் பாகிஸ்தான் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள் அடாரி - வாகா எல்லையில் அடுத்தடுத்து மூன்று ராக்கெட்டுகள் ஏவியது பாகிஸ்தான். இத்தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் வீசிய ராக்கெட் குண்டுகளின் பாகங்களை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எல்லைப்புற கிராம மக்களும் இந்தத் தாக்குதல் குறித்துப் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் மிஷின் கன் மூலம் பல மணி நேரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதி்யை நோக்கி சுட்டனர். இதனால் எல்லையில் பெறும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பாகிஸ்தான் இதேபோன்ற தாக்குதலை நடத்தியது நினைவிருக்கலாம்.
மறுக்கும் பாகிஸ்தான்...
ஆனால் இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என வழக்கம் போல மறுப்புத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.
ஆனால் இந்தத் தாக்குதலுக்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும், மீண்டும் பாகிஸ்தான் இப்படி நடந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
எல்லைப்புற மக்கள் பீதியடையாமல் இருக்குமாறு ராணுவ அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications