லண்டன் பயணம்-ஸ்டாலின் சென்னை திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

ஸ்டாலின் கடந்த மாதம் 31ம் தேதி லண்டன் சென்றார். அப்போது விமான நிலையத்தில் தன்னை சந்தித்த நிருபர்களிடம், சொந்தக் காரணங்களுக்காக லண்டன் செல்வதாகவும், அதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படியான காரணம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனாலும் அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்பினார். உடன் அவரது மனைவி துர்கா, நண்பர் ராஜாசங்கர் ஆகியோரும் வந்தனர்.
ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிகாலை நேரத்திலும் ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, தனிப்பட்ட முறையில் லண்டன் சென்று வந்திருக்கிறேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications