அமைச்சர் நெப்போலியன் முன்பு திமுக நிர்வாகிக்கு அடி உதை!
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன் முன்னிலையில் மருதூர் திமுக நகர செயலாளருக்கு அடி உதை விழுந்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன் நேற்று நன்றி கூற வருகை தருவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் நெப்போலியன் நேற்று காலை முதல் குளித்தலை தொகுதிக்கு உடப்பட்ட கிராமப் பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுன் சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், பணிக்கப்பட்டி அருகே அமைச்சர் நெப்போலின் கார் நேற்று மாலை 6 மணி அளவில் வந்த போது அங்கு திமுக கொடியை ஏற்றி வைக்குமாறு மருதூர் நகர செயலாளரும், மருதூர் டவுன் பஞ்சாயத்து தலைவருமான கண்ணன் வற்புறுத்தியுள்ளார்.
அப்போது, அமைச்சர் நெப்போலியன் தரப்பினருக்கும் கண்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணனை திமுக நிர்வாகிகள் சிலரே அடித்து உதைத்தனர்.
இதனையடுத்து காயமடைந்த கண்ணன் குளித்தலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து கண்ணன் கூறுகையில், எங்கள் பகுதியில் கொடியேற்றி வைக்குமாறு அமைச்சர் நெப்போலியனிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தேன்.
அதற்கு ஒப்புதல் தெரிவித்து அமைச்சர் காலை வருவதாக கூறினார். ஆனால் வரவில்லை. மாலை தான் வந்தார். அப்போது கொடியேற்றச் சொன்னேன். அப்போது, அமைச்சர் தூண்டுதலின் பேரில் திமுக நிர்வகாகிளே என்னை அடித்து உதைத்தனர். இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.