இந்திய படைகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு

Subscribe to Oneindia Tamil

Chianese soldier
குவஹாத்தி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சுட்டு இந்திய பாதுகாப்புப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன் சி்க்கிம் எல்லையில் கெராங் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்திய-சீன எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் (ITBP) மீது சீன ராணுவத்தினர் சுட்டனர். ஆனால், இந்தத் தகவலை மத்திய அரசு வழக்கம்போல் மூடி மறைக்க முயன்றது. ஆனாலும் தகவல் வெளியில் கசிந்துவிட்டது.

1996ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய-சீன ஒப்பந்தத்தையடுத்து இரு தரப்பும் இதுவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதி்ல்லை. முதல் முறையாக இப்போது இந்த ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது.

கடந்த ஆண்டு சிக்கிமின் கெராங் பகுதிக்குள் சீன ராணுவ வாகனங்கள் 1 கி.மீ. தூரம் வரை ஊடுருவியது குறிப்படத்தக்கது.

இப்போது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதையடுத்து கொல்கத்தா விரைந்த ராணுவத் தளபதி தீபக் கபூர், கிழக்கு மண்டல ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

1962ம் ஆண்டு இந்தியா- சீனா போர் நடந்தபோது காஷ்மீர் பகுதியில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது அருணாசல பிரதேசத்தை தனது பகுதி என்று கூறி வரும் சீனா காஷ்மீரின் லடாக் பகுதிக்கும் உரிமை கொண்டாடி வருகிறது. இந் நிலையில் தான் சிக்கிமில் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதல் நடக்கவில்லை-வெளியுறவுத்துறை:

ஆனால், அப்படி ஒரு துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்று வழக்கம் போல் வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+