பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் ஊழல் புகார்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கம்ப்யூட்டர் வாங்கியதில் முறைகேடு, சாப்ட்வேர்கள் வாங்கியதில் முறைகேடு, வேலை நியமனங்களில் லஞ்சம் பெற்றது, பல்கலைக் கழக நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் பொன்னவைக்கோ மீது கூறப்பட்டுள்ளன.
பொன்னவைக்கோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதியளித்தது, ஆன்-லைன் தேர்வு முறையில் டெண்டர் கோருவதில் முறைகேடு செய்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ மீதான குற்றச்சாட்டுகள், கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications